Search This Blog

Wednesday, August 20, 2014

வே.பிரபாகரன் அவர்களினால் எழுதப்பட்ட கவிதை..

அணிவகுத்துள்ளோம்...நாம் தமிழீழப் படைவீரர்கள்!நாம் அணிவகுத்துள்ளோம்இழந்த எமது நாட்டை மீட்கஎதிரி எமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்கநாம் அணிவகுத்துள்ளோம்...நாம் தமிழீழப் படைவீரர்கள்!எமது படையணி கடக்க வேண்டியதுநெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!ஆனால்....அதைத் தாங்கக் கூடியமக்கள் ஆதரவென்னும்கவசம் எம்மிடம் உண்டு!எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...ஆனால்எமது விடுதலை நெஞ்சங்கள்எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்அதன் சத்தம் அமுங்கிவிடும்!நாம் அணிவகுத்துள்ளோம்...நாம் தமிழீழப் படைவீரர்கள்!எமது அணிவகுப்புஎமது தமிழீழ மக்களிடையேஅணிவகுத்துச் செல்கிறது!நாம் செல்லும் இடமெல்லாம்...எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!மக்களிடம் உள்ளபிரதேசம் சாதிமதமென்னும் பேய்களும்அலறி ஓடுகின்றன...எமது படையணி விரைகிறது...எமது தேசத்தை மீட்க!நாம் செல்லும் இடமெல்லாம்காடுகள் கழனிகள் ஆகின்றன!வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்...!உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது.ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.

No comments:

Post a Comment