Search This Blog

Wednesday, August 20, 2014

சுப்ரமணிய பாரதியார்

நடிப்பு சுதேசிகள் -- நடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) – கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே!நாளில் மறப்பாரடீ. சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே!அகலிகளுக்கின்பமுண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்றபெண்களின் கூட்டமடீ! – கிளியே!பேசிப் பயனென்னடீ யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,மந்திரத்தாலேயெங்கும் – கிளியே!மாங்கனி வீழ்வதுண்டோ!உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்செப்பித் திரிவாரடீ! – கிளியே!செய்வதறியாரடீ! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்நாவினாற் சொல்வதல்லால் – கிளியே!நம்புதலற்றாரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்பேதைகள் போலுயிரைக் – கிளியேபேணியிருந்தாரடீ! தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்யஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியேஅஞ்சிக் கிடந்தாரடீ! அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்உச்சத்திற் கொண்டாரடீ‚ – கிளியேஊமைச் சனங்களடீ!ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லாமாக்களுக்கோர்கணமும் – கிளியேவாழத் தகுதியுண்டோ? மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்ஈனர்க் குலகந்தனில் – கிளியே!இருக்க நிலைமையுண்டோ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவவென்பது போல்வந்தே மாதரமென்பார்! - கிளியே!மனத்திலதனைக் கொள்ளார் பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப்பழமை இருந்த நிலை! – கிளியே!பாமரரேதறிவார்! நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!சிறுமையடைவாரடீ! சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்சிந்தை இரங்காரடீ! – கிளியே!செம்மை மறந்தாரடீ! பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!சோம்பிக் கிடப்பாரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்வாயைத் திறந்து சும்மா – கிளியே!வந்தே மாதரமென்பார்!

No comments:

Post a Comment