Search This Blog

Wednesday, August 20, 2014

லெனின்

1.  இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமொரிக்காவின் பொரியநகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாகவருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதாரின்உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகாரில்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும்,ஜெர்மனியிலும்கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர்சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக்காட்சிகள் நடக்கின்றன.அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவாரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ளஉழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவாரின் கவனமும்சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயானஅமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது.பொரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பா¡ரிவைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால்மூடப்பட்டிருந்தன.சாரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்துநில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.”சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமொரிக்க ஐரோப்பியதொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பி¡ரிக்க நாடுகளின்தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலிசெலுத்தப்பட்டது.உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம்இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதிவிடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சாரி, அவருக்குப்பின்னரும் சாரி, எந்தத் தலைவருக்கும் இந்த மாரியாதை கிடைக்கவில்லை.எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களைமட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது.சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்னசெய்துவிட்டார் அவர்?2. வறுமையை ஒழித்த லெனின்எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள்.அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர்ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள் கொள்ளை லாபம்சம்பாதிப்பார்கள். உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமையில்வாடிக்கிடப்பார்கள். ரசியாவிலும் ஒரு காலத்தில் மக்கள் அப்படித்தான்துன்பத்தில் உழன்றனர்.இந்த அநியாயத்தை ஒழித்துக் கட்டியவர்தான் லெனின். அவருடைய தலைமையில்1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற புரட்சியினால்தொழிலாளர்கள், விவசாயிகள் ஆட்சி மலர்ந்தது. உலகில் முதன்முறையாகதொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அந்த தொழிலாளர்களின் ஆட்சிதான்உலகில் எங்குமே நடக்காத சாதனைகளை நிகழ்த்தியது. மனிதனை மனிதன்சுரண்டும் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது. தேசத்தின் வளங்களை ஒருசிலர் மட்டும் அனுபவிப்பது முடிவுக்கு வந்தது. அவை அனைவருக்கும்பொதுவாக்கப்பட்டது. வயது வந்த அனைவருக்கும் திறமைக் கேற்ற வேலையும்,வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட்டது. சமத்துவச் சமூகம் படைக்கப்பட்டது.இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடையநாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும்மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடையவழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள்நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத்தொழிலாளர்களுக்கு லெனின் சாரியான வழி காட்டினார். ஆனால் ரசியமக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்குமுன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.இதனால்தான் அவருடைய மரணத்துக்கு உலகமே அழுதது. உலகின் ஆறில் ஒரு பகுதிநிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற நன்றியும், மீதி நிலப்பரப்பில்அதை நிறைவேற்றும் முன்னரே இறந்து விட்டாரே என்ற துக்கமும்தான் உலகத்தொழிலாளர்களை கண்ணீர் சிந்த வைத்தது.3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில்பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகா¡ரியாகபணி பு¡ரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மாரியா உல்யானவ் அன்பேவடிவானவர். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன்உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதி¡ரிகள்லெனினுடைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும்,பண்புடையவர்களாகவும் வளர்த்தனர். மேலும் தங்கள் சக மனிதர்களைநேசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். நேர்மையான அதிகா¡ரியான தங்கள்தந்தையின் மூலம் நியாயத்திற்காக போராடும் குணத்தைப் பிள்ளைகள்பெற்றனர். தாயார் இனிமையாகப் பாடுவார். ஒவ்வொரு இரவும் அருமையானகதைகளைச் சொல்வார்.சிறு வயது லெனின் மிகுந்த குறும்புகாரர். தன்னுடைய வீட்டுப்பாடங்களைவிரைவில் முடித்துவிட்டுக் குறும்பு செய்யத் தொடங்குவார். அவருடையகுறும்புகளால் வீடு எந்நேரமும் கலகலப்பாக இருக்கும். எதையும்விரைவாகப் பு¡ரிந்து கொள்ளும் திறன் கொண்டவரான லெனின் படிப்பிலும்விளையாட்டிலும் முதலிடத்தில் இருந்தார்.அவர்தன் அண்ணனான அலெக்சாண்டர் மீது மிகுந்த பாசமும், மதிப்பும்கொண்டிருந்தார். அலெக்சாண்டருக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம்அதிகம். சகோதரர்கள் இருவரும், உலகம் எப்படி தோன்றியது? உயிர் எப்படிதோன்றியது? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க விவாதிப்பார்கள்.நிறைய புத்தகங்கள் படித்ததன் விளைவாக அலெக்சாண்டருக்கு ஏராளமானவிசயங்கள் தொரிந்திருந்தன. எதிர்காலத்தில் தன் அண்ணனைப் போலவே தானும்அறிவாளியாக வேண்டுமென்று லெனின் தீர்மானித்துக் கொண்டார். அதற்காககையில் கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தார்.இப்படி மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் முதல் இடிவிழுந்தது. திடீரென ஒருநாள் தந்தை இறந்து போனார். அந்த அடியிலிருந்துமீள்வதற்குள் அடுத்த இடி தாக்கியது. ரசியாவில் கொடுங்கோலாட்சிநடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனைக் கொல்ல முயற்சி செய்ததற்காகஅலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த செய்தியால்குடும்பம் நிலைகுலைந்து போனது.அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப்பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமானதுக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில்மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்றமனவலிமைக்கு ஒரு சான்று.4. வக்கீல் உருவில் ஒரு போராளி!லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகாரின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராகமாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். ஜார் தேசத்தின் வளங்களை சூறையாடிஆடம்பரமாக செலவு செய்தான். மக்களையோ வறுமையில் தள்ளினான். அவர்களின்உ¡ரிமைகளைக் காலில் போட்டு மிதித்தான். மன்னன் சட்டத்திற்கு உட்பட்டுநியாயமாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் கோ¡ரிக்கை.மாணவர்களின் போராட்டத்தை வன்முறையால் ஒடுக்கினான் ஜார். மாணவர்கள்குற்றவாளிகளைப் போல கண்காணிக்கப்பட்டனர். கசான் பல்கலைக்கழகம்சிறைச்சாலை போல மாற்றப்பட்டது. மாணவர்களின் அனைத்து உ¡ரிமைகளும்பறிக்கப்பட்டன. தன்மானமுள்ள மாணவர்கள் இதை எதிர்க்கத் தீர்மானித்தனர்.ஒட்டு மொத்தமாக பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறினர். லெனினும்வெளியேறினார்.பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய லெனின், ஜார் ஆட்சியின்கொடுமைகளை அனுபவத்தின் மூலம் பு¡ரிந்துகொண்டார். ஒடுக்கப்பட்டமக்களுக்காக போராடத் தீர்மானித்தார். வழக்கறிஞர் தொழிலின் மூலம் அதைசெய்யத் திட்டமிட்டார். எனினும் சட்டக்கல்லூ¡ரியில் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தனர். லெனின் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வீட்டில்இருந்தே படித்தார். நான்கு வருட சட்டக்கல்வியை ஒன்றரை ஆண்டில் படித்துமுடித்துப் பட்டம் பெற்றார். அதிலும் மாநிலத்தில் முதலாவதாக.அந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு துக்க செய்தி அவரது தங்கைஓல்கா நோயினால் மரணமடைந்தார். லெனினுடைய தாயார் மனமுடைந்து போனார்.லெனின் பெத்ரோகிராடு நகாரில் வழக்கறிஞர் தொழில் மேற்கொள்ள சென்றார்.அவருடைய குடும்பம் மாஸ்கோ நகாரில் குடியேறியது.5. லெனின் தேர்வு செய்த பாதைலெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையேநடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில்தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவுகட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார்லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார்.அப்படித் தான் அவர் காரல்மார்க்ஸ் என்பவர் எழுதிய ‘மூலதனம்’ என்றநூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை,இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள்பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின்மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப்பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம்.மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்தசெல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர்.உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவேவறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை பு¡ரிந்து கொண்டுஎதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம்,சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர்.இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக்கானது.வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம். உழைக்கும் மக்கள்ஒரு புரட்சியின் மூலம் பழைய அரசையும்,அநீதியான சட்டங்களையும்வீழ்த்த வேண்டும். அந்த இடத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கான புதியஅரசையும், சமத்துவத்திற்கான சட்டங்களையும் இயற்ற வேண்டும்.இதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தக் கருத்துக்கள் கம்யூனிசதத்துவம் என அழைக்கப்படுகிறது. அடுத்ததாக காரல் மார்க்கம் அவருடையநண்பர் எங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார்.அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சிஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன்வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாகமாறினார்.6. போராட்டமே வாழ்க்கையாக...!லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குசெல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவலவாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம்மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார்.இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாககூட்டம் நடத்தினால் ஜா¡ரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.லெனினுடைய பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய கருத்துக்கள்பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்கள் அனைவரையும் சென்று அடைந்தன.தொழிலாளர்கள் மெதுவாக விழிப்புணர்வு பெற்றனர். தொழிலாளர்கள் ஒவ்வொருநாளும் 16 மணிநேரம் முதலாளிகளுக்கு உழைத்துக் கொட்ட வேண்டியிருந்தது.கூலியோ மிகமிகக் குறைவு. இதற்கெதிராகப் போராட்டங்கள் வெடிக்கத்தொடங்கின.இந்த போராட்டங்களை வழிநடத்தும் தலைவர் யார் என்று தொரிந்து கொள்ளஇயலாமல் ஜார் அரசு மண்டையைச் குடைந்து கொண்டிருந்தது. லெனின் மீதுசந்தேகம் ஏற்பட்டது. அவரை கையும் களவுமாகப் பிடிக்க ஏராளமான உளவாளிகள்அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.லெனின் அவர்களை ஏமாற்றிவிட்டு ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடத்திற்குசென்றுவிடுவார். வலிமையான உடற்கட்டும் புத்திக் கூர்மையும் இதற்குஉதவின. ரயிலில் செல்லும்போது அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிடும்.ரயில் நிற்கும். ஆனால் அவர் இறங்கமாட்டார். கையில் ஒரு புத்தகத்தைவைத்துக் கொண்டு ஆழ்ந்து படிப்பது போல் இருப்பார். ரயில் கிளம்பிவேகமெடுக்கும். அப்போது அவர் மிக விரைவாக ஓடும் ரயிலில் இருந்து கீழேகுதிப்பார். ஒரு கணநேரத்தில் மாயாஜால வித்தை போல தங்கள் கண்ணெதிரேலெனின் தப்பி ஓடுவதைக் கண்டு உளவாளிகள் மண்டையைப் பிய்த்துக்கொள்வார்கள். இதுபோல் பலமுறை உளவாளிகள் ஏமாந்து போனதுண்டு.7. சைபீ¡ரியச் சிறைவாசம்1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைதுசெய்யப்பட்டனர். ஐ¡ர் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்குநான்கு ஆண்டு கால சைபீ¡ரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீ¡ரியாவிற்குஅனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீ¡ரியாஎன்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும்.எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும்.ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீ¡ரியாவிற்கு அனுப்பி விடும். அங்கேஅவர்கள் குளி¡ரில் விறைத்து இறந்து போவார்கள்.ஆனால் சைபீ¡ரியக் குளிரை லெனின் தோற்கடித்தார். அவருடைய உறுதியானஉடற்கட்டையை உருக்குலைக்க சைபீ¡ரியப் பனிப் பிரதேசத்தால் இயலவில்லை.அதுமட்டுமல்ல லெனின் தான் காதலித்த கிரூப்ஸ்காயா என்ற பெண்ணைத்திருமணமும் செய்து கொண்டார். லெனினுடன் சேர்த்து அவரையும் சைபீ¡ரியாவிற்குநாடு கடத்தியிருந்தது ஜார் அரசு.சைபீ¡ரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள்எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும்புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனதுகருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்தி¡ரிக்கை அவசியம் என்றமுடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்தமுடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒருபத்தி¡ரிக்கையை வெளியிட முடிவு செய்தார். பத்தி¡ரிக்கையின் மூலம்கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில்கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழிநடத்தமுடியாது.1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரேதீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார்.‘இஸ்கரா’ என்ற முதல் கம்யூனிச பத்தி¡ரிகை வெளிவந்தது.8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்லெனினுடைய கருத்துக்களை ஆதாரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்தி¡ரிக்கையைநாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாகவழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தொரியாமல்தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது.அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல்,வரலாறு முதலியவை விளக்கப்பட்டன.கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாககம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும்வழிகாட்டினார்..1905-ஆம் ஆண்டு ஜா¡ரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள்தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாதுஎன்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள்வறுமை நிலையை ஜா¡ரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயா¡ரித்தனர். அதை ஜா¡ரிடம்கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம்நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள்அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போ¡ரிடதொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது.வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்கபெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சிதோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடையதோழர்கள¨யும் உற்சாகப்படுத்தினார்.“தோல்வியில் இருந்து பாடம் கற்போம்.தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே” என்றார்.புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன்படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டைவிட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும்ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல்வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார்.அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாகமாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்தநேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீதுநடந்து செல்வதே அம்முடிவு.அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிகமெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளேநடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும்பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதை¨யும் பொருட்படுத்தாது கடல்மீது நடக்கத் தொடங்கினார்.அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச்கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பா¡திதூரம்கடந்துவிட்டனர்.9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம்தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர்.சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடையகுடும்பமும் சித்திரவதைக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்கள்கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்கும்படிகூறினர்.இந்தக் கோழைக்களுக்கு லெனின் சாரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில்தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால்மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார்.தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களைஅணிதிரட்டினார்.இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தன. பி¡ரிட்டன், பிரான்சு,அமொரிக்கா முதலிய நாடுகள் ஆசிய,ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்தநாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்¡ரியா,துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பி¡ரித்துதமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோ¡ரிக்கை மறுக்கப்பட்டது உலகைஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பி¡ரிட்டன், அமொரிக்கா,பிரான்சுஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள்மறுபுறமாக 1914-ஆம் வருடம் போ¡ரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப்போரானது. இதில் ரசியா, பி¡ரிட்டனை ஆதாரித்து ஜெர்மனிக்கு எதிராகப்போ¡ரில் குதித்தது.10. ஜாரை வீழ்த்திய பிப்ரவாரி புரட்சிலெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர்என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டிபணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள்.தொழிலாளர்களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போ¡ரில்கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நோரிடும். இதற்குபதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டுமுதலாளிகளுடன் போ¡ரிட்டால்,தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும்எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதி¡ரிதான் சுரண்டப்படுகின்றனர்.அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்யவேண்டும் என்று லெனின் கூறினர்.ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இதுஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்குஇது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவி¡ரித்தாடியது.எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்துகொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்துகொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோபோரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளைலாபம் சம்பாதித்தனர்.லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சாரியானவை என்ற மக்கள் பு¡ரிந்துகொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும்,தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின்கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவாரி மாதம் புரட்சிவெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறைஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தைமுதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார்.பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கானதொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள்ஓடோடி வந்திருந்தனர்.11. சதியை முறியடித்த லெனின்ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார்.தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரைவீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை.ஜா¡ரின் அதிகாரத்தை முதலாளிகளும்,பண்ணையார்களும் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதாரிப்பார்கள்.பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களைஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்குவரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள்என்று அறைகூவினார்.லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவேஇருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீதுநம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்போனது. புதிய அரசு போ¡ரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலைகொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின்செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும்ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர்.லெனினுடைய கருத்துக்களே சாரியானவை என ஏற்கத் தொடங்கினர்.மக்களை ஒடுக்குவதற்காக புதிய அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படிபடைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாகசெல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டுவெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்றுநம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.புல் அறுப்பவராக, கூலி விவசாயியாக,என்ஜின் டிரைவராக மாறுவேடம் பூண்டுவெவ்வேறு இடங்களில் தங்கினார். ஹெல்சிங்கி நகாரில் லெனின்தங்கியிருப்பதாக அரசு சந்தேகப்பட்டது. அந்தநகாரின்மூலைமுடுக்குகளெல்லாம் வலைவீசித் தேடியது. ஒரு இளம் காவல் துறை அதிகா¡ரியிடம்லெனினைப் பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் குறிப்பிடவேண்டிய விசயம் என்னவென்றால், அந்த அதிகா¡ரியின் வீட்டில் லெனின்பாதுகாப்பாகத் தங்கியிருந்தார். ஒரு தொழிலாளியின் மகனான அந்த இளம்காவல் அதிகாரி கம்யூனிஸ்ட் கட்சியை ஆதாரித்தார்.மக்களின் கோ¡ரிக்கைகளான போர் நிறுத்தம்,உழுபவனுக்கு நிலம்,உழைப்பவனுக்கு அதிகாரம் போன்றவற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமேசெயல்படுத்த முடியும் என மக்கள் பு¡ரிந்து கொள்ளத் தொடங்கினர்.ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கானகாலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாகதொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சிஅதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக்குழு ஏற்றுக் கொண்டது.ஆனால் மைக்குழுவில் இருந்த பயந்தாங்கொள்ளிகள் இத்திட்டத்தைஎதிர்த்தனர். அதுமட்டுமல்ல, மிக இரகசிமான இந்த திட்டத்தை பத்தி¡ரிகைகளுக்குவெளிப்படுத்தி துரோகம் செய்தனர். ஆகவே திட்டத்தில் குறிப்பிட்டிருந்தநாளுக்கு முன்பாகவே நவம்பர் 7-ம் தேதி புரட்சியைத் தொடங்க முடிவுசெய்தார் லெனின். இத்தகவல் பெத்ரோகிராடு நகரத் தொழிலாளர்களுக்குரகிசயமாக கொண்டு செல்லப்பட்டன.12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்துநிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில்தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள்தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின்முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன்அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள்,காவல்நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின்தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறிஅடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது.லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம்செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போ¡ரினால் நீண்ட காலமாக அமைதிஇழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும்,வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைவளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்குபகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தொரியாமல்மறைந்தது.உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர்.சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தைநடத்தின. ஒரு ஊ¡ரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத்தேவையான சட்டங்களையும்,திட்டங்களையும் தீட்டுவார்கள். அதைஅமல்படுத்த ஒரு நிர்வாகக் குழவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக்குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும். சாரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம்நடைபெறும்.

No comments:

Post a Comment