Search This Blog

Wednesday, August 20, 2014

தமிழா நீ பேசுவது தமிழா!

தமிழா நீ பேசுவது தமிழா! அன்னையைத் தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்  அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்  என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்  இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய் ! உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை  ஒய்ப் என்றாய் மனைவியை பார் உந்தன்போக்கை  இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை  இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை ! வண்டிக்காரன் கேட்டான் லேப்ட்டா?ரைட்டா? வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா? துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா ? தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? கொண்ட நண்பனை பிரண்டு என்பதா? கோலத் தமிழ் மொழியை ஆங்கிலம் தின்பதா ? கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா? கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா ? பாட்டி உதட்டில் என்ன லிப்ஸ்டிக்கா ? வீட்டில் பெண்ணின் தலையில் ரிப்பனா? வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா ?                                    -கவிஞர் காசி ஆனந்தன்

No comments:

Post a Comment