Search This Blog

Tuesday, September 2, 2014

செயல்


எளிதானதொரு செயல் தான்…!!! ஆயிரம் முறை கண்ட திரைக்கதையொன்று மீண்டும் வெற்றிநடைப் போட்டுக் கொண்டு தான் இருந்தது…!!! முடிவினை அறிந்திருந்தும் அறியாததைப் போல் நடிப்பதொன்றும் கடினமல்ல தான்…!!! ஆச்சர்யக்குறிகளும் வரிஅமைப்புகளும் கவிதைகளுக்கு போதுமானதாய் இருப்பதைப் போல் போலிப் புன்னகைகளும் மௌனகண்ணீர்த்துளிகளும் நடிப்பிற்கான முகமூடிக்கு போதுமானதாய் அமைந்து விடுகின்றன…!!! மேலும் முடிந்து விடும் என்று அறிந்ததொன்றை கடந்து விடுவது என்பது எளிதானதொரு செயல் தான்…!!! மரணிக்கும் ஓர் கனவாக இருக்கட்டும் அறிந்த திரைக்கதையாக இருக்கட்டும் இந்த கவிதையாக (???) இருக்கட்டும் ஏன் வாழ்க்கையாகவும் இருக்கட்டும்…. முடிந்து விடும் என்றறிந்த ஒன்றை கடந்து விடுவது என்பது எளிதானதொரு செயல் தான்…!!! ஆம்...!!! அதனை சிரித்துக் கொண்டும் முகமூடியினை மாட்டிக் கொண்டும் கடந்து விடலாம்… நாட்களைக் கடத்துவது போலவே…!!!

No comments:

Post a Comment